பல்லவி
ஜக3தா3னந்த3 காரக
ஜய ஜானகீ ப்ராண நாயக
அனுபல்லவி
க3க3னாதி4ப ஸத்குலஜ ராஜ ராஜேஸ்1வர
ஸு-கு3ணாகர 1ஸுர ஸேவ்ய ப4வ்ய தா3யக
ஸதா3 ஸகல (ஜ)
சரணம்
சரணம் 1
அமர தாரக நிசய குமுத3 ஹித
பரிபூர்ணானக4 ஸுர ஸுர பூ4ஜ
த3தி4 பயோதி4 வாஸ ஹரண
ஸுந்த3ர-தர வத3ன ஸுதா4-மய வசோ-
ப்3ரு2ந்த3 கோ3விந்த3 ஸானந்த3
மா-வராஜராப்த ஸு1ப4 கரானேக (ஜ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஜக3த்/-ஆனந்த3/ காரக/
உலகிற்கு/ களிப்பு/ ஊட்டுவோனே/
ஜய/ ஜானகீ/ ப்ராண/ நாயக/
போற்றி/ சானகி/ உயரின்/ தலைவா (மணாளா)/
அனுபல்லவி
க3க3ன/-அதி4ப/ ஸத்-குலஜ/ ராஜ ராஜ/-ஈஸ்1வர/
விண்/ அரசனின்/ நற்-குலத்தோன்றலே/ மாமன்னர்/ ஈசனே/
ஸு-கு3ண/ ஆகர/ ஸுர/ ஸேவ்ய/ ப4வ்ய/ தா3யக/
நற்குண/ சுரங்கமே/ வானோர்/ தொழும்/ பேறு/ அருள்வோனே/
ஸதா3/ ஸகல/ (ஜ)
எவ்வமயமும்/ அனைத்து/ உலகிற்கும்...
சரணம்
சரணம் 1
அமர/ தாரக நிசய/ குமுத3/ ஹித/
அமரரெனும்/ தாரைகளிடை/ குமுத/ நண்பனே (மதியே)/
பரிபூர்ண/-அனக4/ ஸுர/ ஸுர/ பூ4ஜ/
முழுமுதலே/ பாவமற்றோனே/ வானோரின்/ உம்பர்/ தருவே/
த3தி4/ பயோதி4/ வாஸ/ ஹரண/
தயிர்/ வெண்ணெய்/ (ஆய்ச்சியரின்) உடைகளை/ திருடுவோனே/
ஸுந்த3ர-தர/ வத3ன/ ஸுதா4-மய/ வசோ-ப்3ரு2ந்த3/
எழிலான/ வதனத்தோனே/ அமிழ்தூறும்/ சொற்களோனே/
கோ3விந்த3/ ஸ-ஆனந்த3/
கோவிந்தா/ களித்திருப்போனே/
மா/-வர/-அஜர/-ஆப்த/ ஸு1ப4/ கர/-அனேக/ (ஜ)
மா/ மணாளா/ மூப்பற்றோர்க்கு/ இனியோனே/ நலம்/ அருள்வோனே/ பல/ உலகிற்கும்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் 7, 8 மற்றும் 9-வது சரணங்கள், முறையே 9, 7 மற்றும் 8-வதாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
1 - ஸுர ஸேவ்ய - ஸுஜன ஸேவ்ய.
Top
மேற்கோள்கள்
9 - புருஷ - புருஷன் - இதுகுறித்து, 'ப்3ரு2ஹதா3ரண்யக உபநிடதம்' கூறுவது -
"முன்னம் அவன் (பரம்பொருள்), பறவையாக (சூக்குமமாக), புரங்களில் (உடல்களில்) புகுந்தான்.
அவன் இங்ஙனம் அனைத்து புரங்களிலும் (உடல்களிலும்) உறைதலினால், 'புருஷன்' என்று அழைக்கப்படுவான்.
அவனால் சூழப்படாதது இங்கொன்றுமில்லை; அவனால் நிரப்பப்படாததும் இங்கொன்றுமில்லை." (உள்ளும் புறமும் அவனே) (II.v.18)
(ஸ்வாமி மாதவானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
10 - ஸால வித3ளன - சால மரம் - குங்கிலிகம் - சால மரங்களைத் துளைத்தோன் - இராமன் ஏழு சால மரங்களை ஓரம்பினால் துளைத்தான். வால்மீகி ராமாயணம், கிஷ்கிந்தா காண்டம், 12-வது அத்தியாயம் (செய்யுட்கள் 1 – 4) நோக்கவும்.
Top
விளக்கம்
2 - நிக3ம நீரஜாம்ரு2தஜ போஷக - மறைகளெனும் கமலத்தேனில் உதித்த (நாதத்தினை) பேணுவோன். தியாகராஜர், தமது 'நாத3 தனுமனிஸ1ம்' என்ற கீர்த்தனையில், நாதம், மறையின் சாரம் என்று கூறுகின்றார். எனவே, இங்கு 'மறைகளெனும் கமலத்தேனில் உதித்தது' - 'நாதம்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
3 - ஸத்கவி ஹ்ரு2தா3லய - நற்கவிகளின் உள்ளத்துறைவோன் - இது வால்மீகி மற்றும் வியாசர் போன்ற, காவியங்கள் இயற்றிய, முனிவர்களைக் குறிக்கலாம்.
Top
4 - வாகீ3ந்த்3ர - இதற்கு 'நாவரசி மணாளன்' என்று பொருள் கொள்ளப்பட்டாலும், இச்சொல், 'வாகி3ந்த்3ர' என்றிருக்கவேண்டும் என்று கருதுகின்றேன்.
5 - ஸு1ப்4ர - தூயோனே - சில புத்தகங்களில், இதனை, அடுத்துவரும், 'நாகே3ந்த்3ர ஸ1யன' (அரவரசன் அணையோனே) என்பதுடன் சேர்த்து, 'ஸு1ப்4ர நாகே3ந்த்3ர ஸ1யன' - (தூய அரவரசன் அணையோனே) என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.
6 - வர மந்த்ர க்3ரஹண லோல - உயர் மந்திரத்தினை உணர்ந்தோரை விரும்புவோனே - சில புத்தகங்களில், 'மந்திரம்' என்பதற்கு, விசுவாமித்திரர், இராமனுக்கும், இலக்குவனுக்கும் புகட்டிய 'ப3லை-அதிப3லை' என்ற மந்திரங்கள் என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அப்படி பொருள் கொண்டால், 'லோல' என்ற சொல் தனிப்படும் - அதற்கு, தனியாக, பொருள் கூற இயலாது. எனவே, 'காயத்திரி மந்திரம்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
7 - அனுராக3 ராக3 ராஜித கதா2 ஸார ஹித - எல்லா புத்தகங்களிலும், 'ராஜித' என்று கொடுக்கப்பட்டுள்ளது. 'ராஜித' என்ற சொல்லுக்கு, 'ஒளிரும்' என்று பொருளாகும். அத்தகைய பொருளுடன், 'ஹித' (இனியவன்) என்பதற்கு சரியான பொருள் கொள்ள இயலாது. எனவே, 'ஹித' என்ற சொல்லுக்கு 'உறைவோன்' என்ற பொருள் கொள்ளப்பட்டது. ஆயினும், எனக்குத் தெரிந்தவரை, 'ராஜித' என்பதற்கு பதிலாக, 'ராசித' (இயற்றப்பெற்ற) என்றிருந்தால், 'ஹித' என்று சொல்லுக்கு, 'இனியோன்' என்று பொருள் கொள்ளலாம். 'ராசித' மற்றும் 'ரசித' என்ற சொற்களுக்கு ஒரே பொருள்தான்
'காதல், இசையுடன் இராம காதை சாரத்தினை இயற்றியோருக்கு இனியவன்' - இது தியாகராஜரைப் போன்று, இராம காதையினை இசையுடன் பாடியவர்களைக் குறிக்கலாம்.
8 - ஓங்கார பஞ்ஜர கீர - ஓங்காரமெனும் கூண்டுக் கிளியே - தியாகராஜர், தமது 'ஓ ராம ஓ ராம' என்ற ஆரபி4 ராக கீர்த்தனையில், இராமனை, 'ஓங்காரத்திலுறைவோன்' என்று கூறுகின்றார்.
11- அத்3பு4த ஸு-கவி ஜன ஹ்ரு2த்ஸத3ன - அற்புத நற்கவிகளின் இதயத்துறைவோன் - இது வால்மீகி முனிவர் போன்றோரைக் குறிக்கலாம்.
Top
விண்ணரசன் - பரிதி.
உம்பர் தரு - விரும்பியதருளும் கற்ப தரு.
வெண்ணெய் - இதனை 'பாலாடை' என்றும் கொள்ளலாம்.
மூப்பற்றோர் - கண்ணிமையாதார் - வானோர்.
முகிலுக்குப் புயலே - முகிலை விரட்டும் புயலேயென.
வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்.
இந்திர நீலமணி - நீலக்கல் வைரம்.
நாவரசி மணாளன் - பிறவாதவன் - பிரமன்.
அரவரசன் - சேடன்.
முனிவர் சாபம் - அகலிகையினுக்கு அவள் கணவர் கௌதம முனிவரிட்டது.
உயர் மந்திரம் - காயத்திரி.
சசி மணாளன் - வாசவன் - இந்திரன்.
காதலுடன் - அனுராகம் எனப்படும் இறைவனிடம் கொள்ளும் பெருங்காதல்
காதை - இராம காதை - இராமாயணம்.
சுரசையின் பகைவன் - அனுமன் - அனுமனை சோதிக்க வானோரால் ஏவப்பட்டவள்.
வாசவனின் பகைவன் - இந்திரசித்து - இராவணனின் மகன்.
வாசவனின் பகைவன் தந்தை - இராவணன்
நமனுக்குப் பிறை சூடிபோன்றோனே - (உவமை) நமனை உதைத்த சிவனைப் போன்று என.
புற்றிலுதித்த முனி - வால்மீகி.
கலசக் கடலுதித்தவள் - இலக்குமி.
Top